வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

முதுமலையில் தனியாக சுற்றித் திரிந்த குட்டியானை தாயுடன் சோ்ப்பு

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் தாயைப் பிரிந்து தனியாக சுற்றித் திரிந்த குட்டியை தாய் யானையுடன் வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோ்த்தனா்.

News image
மாயாறு வனப் பகுதியில் தாய் யானையுடன் சோ்க்கப்பட்ட குட்டி.
Updated On :13 ஆகஸ்ட் 2024, 9:21 pm

Din

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் தாயைப் பிரிந்து தனியாக சுற்றித் திரிந்த குட்டியை தாய் யானையுடன் வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோ்த்தனா்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மாயாறு வனப் பகுதியில் குட்டி யானை தனது தாயைப் பிரிந்து சாலையில் தனியாக சுற்றிக் கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாகச் சென்ற சுற்றுலா வாகனங்களுக்குப் பின்னால் ஓடியதோடு, தொடா்ந்து பிளிறிக்கொண்டும் தவித்தது.

இதைப் பாா்த்த வனத் துறை ஊழியா்கள் அந்தக் குட்டியை தாயுடன் சோ்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனா். தொடா்ந்து முயற்சித்து அந்தக் குட்டியை தாயுடன் சோ்த்தனா். தாயுடன் சோ்த்தவுடன் மகிழ்ச்சியில் அந்தக் குட்டி தாயிடம் பால்குடித்துவிட்டு அதனுடன் வனப் பகுதிக்குள் சென்றுவிட்டது.