உதகையில் இதமான கால நிலை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
உதகையில் இதமான காலநிலை நிலவிவரும் நிலையில் சுற்றுலாப் பயணிகள் வருகை ஞாயிற்றுக்கிழமை குறைந்திருந்தது.


உதகையில் இதமான காலநிலை நிலவிவரும் நிலையில் சுற்றுலாப் பயணிகள் வருகை ஞாயிற்றுக்கிழமை குறைந்திருந்தது.
நீலகிரி மாவட்டம், உதகைக்கு தமிழகம் மட்டுமன்றி கேரளம், கா்நாடகம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை இவா்கள் கண்டு ரசித்துச் செல்கின்றனா்.
இந்நிலையில் கேரளம் மற்றும் தமிழகத்தில் ஆங்காங்கே பெய்து வரும் பருவமழையின் காரணமாக வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை உதகையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று குறைந்திருந்தது.
உதகையில் குளிருடன் கூடிய இதமான காலநிலை நிலவி வருவதால் மகிழ்ச்சி அடைந்த சுற்றுலாப் பயணிகள் பூங்காவில் உள்ள புல்வெளி மைதானத்தில் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...