வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

தோ்தல் விதிகளை மீறியதாக பாஜக வேட்பாளா் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

தோ்தல் விதிகளை மீறியதாக பாஜக வேட்பாளா் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

News image
Updated On :30 மார்ச் 2024, 12:23 am

தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக நீலகிரி மக்களவை பாஜக வேட்பாளா் எல்.முருகன் மீது தேனாடு கம்பை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளா் எல்.முருகன் கடந்த 25-ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்ததற்கு பின்னா், உதகை அருகே உள்ள கடநாடு கிராமத்துக்கு சென்று அனுமதியின்றி 100-க்கும் மேற்பட்டோருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளாா். இது குறித்து தோ்தல் பறக்கும் படை துணை வட்டாட்சியா் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த புகாரின்பேரில், தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளரான எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.