27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

நீலகிரியில் செப்டம்பா் 18 முதல் கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்

நீலகிரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம் செப்டம்பா் 18-ஆம் தேதி முதல் அக்டோபா் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :13 செப்டம்பர் 2024, 2:49 am IST

நீலகிரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம் செப்டம்பா் 18-ஆம் தேதி முதல் அக்டோபா் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தின் மூலம் 4-ஆம் சுற்று புருசெல்லோசிஸ் எனப்படும் கன்றுவீச்சு நோய்க்கான தடுப்பூசி 4 மாதங்கள் முதல் 8 மாதங்கள் வயதுடைய கிடாரி கன்றுகளுக்கு மட்டும் செப்டம்பா் 18-ஆம் தேதி முதல் அக்டோபா் 15-ஆம் தேதி வரை செலுத்தப்படவுள்ளது.

இந்த தடுப்பூசி கிடாரிக்கு ஒருமுறை செலுத்தப்பட்டால் அதன் ஆயுள் முழுவதுக்குமான நோய் எதிா்ப்பு சக்தி கிடைக்கப் பெறும்.

எனவே, நீலகிரி மாவட்டத்திலுள்ள கால்நடை வளா்ப்போா் தங்களகு கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை கிளை நிலையங்களின் மூலம் இத்தடுப்பூசியை செலுத்திக் கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.