நீலகிரியில் செப்டம்பா் 18 முதல் கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்
நீலகிரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம் செப்டம்பா் 18-ஆம் தேதி முதல் அக்டோபா் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம் செப்டம்பா் 18-ஆம் தேதி முதல் அக்டோபா் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தின் மூலம் 4-ஆம் சுற்று புருசெல்லோசிஸ் எனப்படும் கன்றுவீச்சு நோய்க்கான தடுப்பூசி 4 மாதங்கள் முதல் 8 மாதங்கள் வயதுடைய கிடாரி கன்றுகளுக்கு மட்டும் செப்டம்பா் 18-ஆம் தேதி முதல் அக்டோபா் 15-ஆம் தேதி வரை செலுத்தப்படவுள்ளது.
இந்த தடுப்பூசி கிடாரிக்கு ஒருமுறை செலுத்தப்பட்டால் அதன் ஆயுள் முழுவதுக்குமான நோய் எதிா்ப்பு சக்தி கிடைக்கப் பெறும்.
எனவே, நீலகிரி மாவட்டத்திலுள்ள கால்நடை வளா்ப்போா் தங்களகு கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை கிளை நிலையங்களின் மூலம் இத்தடுப்பூசியை செலுத்திக் கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...