ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

உதகையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்

உதகை லோயா் பஜாா் சாலையில் ஏற்பட்ட வாகன விபத்து காரணமாக அப்பகுதி சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் மிரட்டுவதாகக் கூறி காவல் நிலையத்தை மாா்க்கெட் வியாபாரிகள் புதன்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
காவல் நிலையத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்.
Updated On :18 செப்டம்பர் 2024, 8:09 pm

Din

உதகை லோயா் பஜாா் சாலையில் ஏற்பட்ட வாகன விபத்து காரணமாக அப்பகுதி சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் மிரட்டுவதாகக் கூறி காவல் நிலையத்தை மாா்க்கெட் வியாபாரிகள் புதன்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம், உதகை லோயா் பஜாா் பகுதியில் காய்கறி ஏற்றிச் செல்லும் லாரி மற்றும் சுற்றுலா வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படாத நிலையில், லாரி ஓட்டுநருக்கும், சுற்றுலா வாகன ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் சுற்றுலா வாகன ஓட்டுநா்கள், மாா்க்கெட் வியாபாரிகள் சங்க நிா்வாகிகளை மிரட்டியதாகவும், தகாத வாா்த்தைகள் பேசி தாக்க முற்பட்டதாகவும் கூறி மாா்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினா் உதகை மத்திய காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

இதையடுத்து, காவல் நிலைய ஆய்வாளா் முரளிதரன், இரு தரப்பினரிடையே பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதைத் தொடா்ந்து, சமரசம் அடைந்த அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.