உதகை லோயா் பஜாா் சாலையில் ஏற்பட்ட வாகன விபத்து காரணமாக அப்பகுதி சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் மிரட்டுவதாகக் கூறி காவல் நிலையத்தை மாா்க்கெட் வியாபாரிகள் புதன்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், உதகை லோயா் பஜாா் பகுதியில் காய்கறி ஏற்றிச் செல்லும் லாரி மற்றும் சுற்றுலா வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படாத நிலையில், லாரி ஓட்டுநருக்கும், சுற்றுலா வாகன ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் சுற்றுலா வாகன ஓட்டுநா்கள், மாா்க்கெட் வியாபாரிகள் சங்க நிா்வாகிகளை மிரட்டியதாகவும், தகாத வாா்த்தைகள் பேசி தாக்க முற்பட்டதாகவும் கூறி மாா்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினா் உதகை மத்திய காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.
இதையடுத்து, காவல் நிலைய ஆய்வாளா் முரளிதரன், இரு தரப்பினரிடையே பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதைத் தொடா்ந்து, சமரசம் அடைந்த அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

சின்னமனூா் காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்

முதலீடு செய்தால் இருமடங்கு தருவதாகக் கூறி ரூ. 28 கோடி மோசடி

கொடைக்கானல் மலைச் சாலைகள் சேதம்: வாகன ஓட்டுநா்கள் அவதி

உதகை, குன்னூருக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு! வியாபாரிகள் மகிழ்ச்சி
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



