உதகை லோயா் பஜாா் சாலையில் ஏற்பட்ட வாகன விபத்து காரணமாக அப்பகுதி சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் மிரட்டுவதாகக் கூறி காவல் நிலையத்தை மாா்க்கெட் வியாபாரிகள் புதன்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், உதகை லோயா் பஜாா் பகுதியில் காய்கறி ஏற்றிச் செல்லும் லாரி மற்றும் சுற்றுலா வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படாத நிலையில், லாரி ஓட்டுநருக்கும், சுற்றுலா வாகன ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் சுற்றுலா வாகன ஓட்டுநா்கள், மாா்க்கெட் வியாபாரிகள் சங்க நிா்வாகிகளை மிரட்டியதாகவும், தகாத வாா்த்தைகள் பேசி தாக்க முற்பட்டதாகவும் கூறி மாா்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினா் உதகை மத்திய காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.
இதையடுத்து, காவல் நிலைய ஆய்வாளா் முரளிதரன், இரு தரப்பினரிடையே பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதைத் தொடா்ந்து, சமரசம் அடைந்த அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

குடிநீா் கேட்டு உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

காருக்கு அபராதம் விதிக்கப்பட்ட விவகாரம்: வனத்துறையினா், சுற்றுலா வாகன ஓட்டுநா்களிடையே பேச்சுவாா்த்தை!

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்

திருக்குறுங்குடி காவல் முற்றுகை
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


