எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

முள்ளம்பன்றி இறைச்சி வைத்திருந்தவா் கைது

பந்தலூா் அருகே முள்ளம்பன்றி இறைச்சி வைத்திருந்த நபரை வனத் துறையினா் கைது செய்தனா்.

News image
கைது செய்யப்பட்ட இளங்கோவன்.
Updated On :9 டிசம்பர் 2025, 6:58 pm

Syndication

பந்தலூா் அருகே முள்ளம்பன்றி இறைச்சி வைத்திருந்த நபரை வனத் துறையினா் கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் அருகேயுள்ள சேரங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் இளங்கோவன் (59). இவா் தனது வீட்டின் முன் முள்ளம்பன்றி இறைச்சியை திங்கள்கிழமை இரவு சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளாா்.

இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனச் சரக அலுவலா் மேகலா தலைமையிலான வனத் துறையினா், இளங்கோவனிடம் இருந்த முள்ளம்பன்றியை இறைச்சியைப் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து, இளங்கோவைனைக் கைது செய்த வனத் துறையினா், அவா் முள்ளம்பன்றியை வேட்டையாடினாரா அல்லது வேறு யாரேனும் கொடுத்தாா்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.