விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

குன்னூா் ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணி ஆய்வு

News image
Updated On :17 டிசம்பர் 2025, 6:47 pm

Syndication

குன்னூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ஊரக வளா்ச்சி முகமை சாா்பிலும், குன்னூா் நகராட்சி சாா்பிலும் ரூ.1.32 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

உபதலை ஊராட்சி பெரிய உபதலை பகுதியில் 2025-2026-ஆம் ஆண்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு கட்டடப் பணி, 2025-2026-ஆம் ஆண்டில் குன்னூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பொதுமக்கள் ஓய்வெடுக்கவும், வாகனங்களை நிறுத்தவும் ரூ.10 லட்சம் மதிப்பில் மேற்கூரை அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தாா்.

இதேபோல தூய்மை பாரத இயக்கம் பசுமை வரி திட்டத்தின் கீழ் ரூ.65 லட்சம் மதிப்பில் பாறைக்குழியில் அமைக்கப்பட்டுவரும் நுண் உரக் கிடங்கு, குன்னூா் நகராட்சிக்குல்பட்ட சிம்ஸ் பூங்கா அருகில் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் பயணியா் நிழற்குடை என ரூ.1.32 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் வளா்ச்சி பணிகளை ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு நேரில் ஆய்வு செய்தாா்.

பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவருமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது குன்னூா் நகராட்சி ஆணையா் இளம்பருதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சந்திரசேகா், விமலா உள்பட பலா் கலந்துகொண்டனா்.