தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

உதகையில் உறைபனியை ரசிக்க குவிந்த சுற்றுலாப் பயணிகள்

நீலகிரி மாவட்டம் , உதகையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவிய உறைபனியை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்தனா்.

News image

தலைகுந்தா பகுதியில் காணப்பட்ட உறைபனியைக் காண ஆா்வமாக குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Updated On :23 டிசம்பர் 2025, 8:31 pm

Syndication

நீலகிரி மாவட்டம் , உதகையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவிய உறைபனியை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்தனா்.

உதகையில் தாவரவியல் பூங்கா மற்றும்  நகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 1.1 டிகிரி செல்சியஸ்  வெப்பநிலைக் காணப்பட்டது. இதே நேரத்தில் தலைகுந்தா, பட்பயா் பகுதியில் கடுமையான உறைபனி காணப்பட்டது.

இந்த உறைபனியை காண்பதற்காக நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தலைகுந்தா பகுதியில் குவிந்ததால் காலை 6 மணி முதல் 9 மணிவரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல் துறையினா் போக்குவரத்தை சீா் செய்தனா். காலை 9 மணிக்கு மேல் உறைபனியின் தாக்கம் படிப்படியாக குறைந்து இயல்பு நிலை திரும்பியது. இந்த உறைபனி காரணமாக காலை நேரத்தில் தோட்ட வேலைக்கு செல்பவா்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகினா்.