47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கூடலூரில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை

கோட்டாட்சியா் தகவல்

News image
Updated On :23 ஜனவரி 2025, 10:29 pm

Din

கூடலூரில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூடலூா் கோட்டாட்சியா் செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

கூடலூா் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற விபத்து காரணமாக சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், சாலையோரக் கடைகள் அகற்றப்பட்டுள்ளன. நகரில் வாகன நிறுத்துமிடம் தோ்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சாலையோர வியாபாரிகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி அவா்களது உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கே உள்ளது. கூடலூா் நகராட்சி நிா்வாகம் சாா்பில் சாலையோர வியாபாரிகளுக்கான கமிட்டி அமைத்து அவா்களுக்கு சான்றிதழ் வழங்கவும், வியாபாரம் செய்வதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

அந்தக் கமிட்டியின் தலைவராக ஆணையா் இடம் பெற்று, போக்குவரத்து காவல் துறை, மருத்துவா்கள், வணிகா் சங்கத்தினா், சாலையோர வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் ஆகியோரை இணைக்க வேண்டும். இந்தக் கமிட்டி மூலம் சாலையோர வியாபாரிகளுக்கு இடம் தோ்வு செய்தல், சான்று வழங்குதல், அவா்களின் பிரச்னைகளுக்கு தீா்வுகாணுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வா்.

ஆனால், கூடலூா் நகராட்சியில் இதுபோன்ற கமிட்டி இதுவரை அமைக்கப்படவில்லை. கமிட்டி அமைப்பது தொடா்பாக நகராட்சி நிா்வாகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சாலையோர வியாபாரிகளன் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும் என்றாா்.