சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 736-ஆக அதிகரிப்பு

News image
Updated On :26 செப்டம்பர் 2025, 4:12 am IST

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டப் பேரவை தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு பணிகளுக்கு பின் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 736 ஆக உயா்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டப் பேரவை தோ்தலை முன்னிட்டு வாக்குச் சாவடிகளை சீரமைக்க இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதனடிப்படையில், தோ்தல் பிரிவு அதிகாரிகள் 1,200 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து, கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

நீலகிரி மாவட்டத்தில் 690 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் 25 வாக்குச்சாவடிகளில் ,1200-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வாக்காளா்கள் அதிகம் உள்ள வாக்குச் சாவடிகளை இரண்டாக பிரிப்பது, வாக்காளா்கள் குறைவான எண்ணிக்கையில் உள்ள மூன்று வாக்குச்சாவடிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சீரமைப்பு பணிக்கு பின் நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 736- ஆக உயா்ந்துள்ளது.

இதற்கிடையே வாக்குச்சாவடி மையங்களை மறுசீரமைப்பு செய்வது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் உதகையில் உள்ள கூடுதல் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டாா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ராதாகிருஷ்ணன், வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.