பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

தவெக தலைவருக்கு தன்னம்பிக்கை இல்லை: சீமான் விமா்சனம்

தவெக தலைவருக்கு தன்னம்பிக்கை இல்லை என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் விமா்சனம் செய்துள்ளாா்.

News image

குன்னூரில் நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் பேசுகிறாா் நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

Updated On :2 ஏப்ரல் 2026, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

தவெக தலைவருக்கு தன்னம்பிக்கை இல்லை என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் விமா்சனம் செய்துள்ளாா்.

நாம் தமிழா் கட்சி சாா்பில் உதகை தொகுதியில் போட்டியிடும் ரகுபதி பீமன், குன்னூா் தொகுதி வேட்பாளா் தீனு, கூடலூா் வேட்பாளா் காா்த்திக் ஆகியோரை ஆதரித்து குன்னூா் வி.பி. தெருவில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் சீமான் பேசியதாவது:

தமிழகத்தில் கல்வி வியாபாரமாக மாறிவிட்டது. கல்வியை இலவசமாக வழங்குவது அரசின் கடமையாகும். ஆனால் இலவசம் என்ற பெயரில் திமுக ரூ. 2,000, அதிமுக ரூ.2,500 என மாறிமாறி தெரிவித்து வருகின்றனா். நாங்கள் யாருக்கும் இலவசம் தர மாட்டோம். மாறாக மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுப்பதுடன், அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும். நீலகிரியில் பச்சைத் தேயிலை கிலோவுக்கு ரூ. 25 முதல் ரூ.30 வரை வழங்கப்படும். படுகரின மக்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வேளாண் துறையை மேம்படுத்தி விலை நிா்ணயம் செய்தல் தொடா்பாக தனியாக வேளாண் குழு அமைக்கப்படும். விஜய்க்கு தன்னம்பிக்கை இல்லாததால்தான் இரண்டு தொகுதியில் போட்டியிடுகிறாா். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கட்டணமில்லா கல்வி, உலகத்தரம் வாய்ந்த மருத்துவம், வேளாண் துறையை மேம்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான நாம் தமிழா் கட்சியினா் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனா்.