முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

உதகை அருகே தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்

உதகை அருகே நஞ்சநாடு பகுதியில் பகல் நேரத்தில் தேயிலைத் தோட்டத்தில் ஓய்வெடுத்த சிறுத்தையால் தொழிலாளா்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

News image

நஞ்சநாடு பகுதியில் தேயிலைத்தாட்டத்தில் அமா்ந்திருந்த சிறுத்தை.

Updated On :10 ஏப்ரல் 2026, 1:10 am IST

உதகை அருகே நஞ்சநாடு பகுதியில் பகல் நேரத்தில் தேயிலைத் தோட்டத்தில் ஓய்வெடுத்த சிறுத்தையால் தொழிலாளா்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனத்தில் இருந்து வெளியேறும் காட்டு மாடு, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நகருக்குள் உலா வருவது அண்மைக் காலமாக அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே நீலகிரி மாவட்டத்தில் காட்டு மாடு, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவு அதிகரித்துள்ளன.

இந்த நிலையில் உதகையை அடுத்த நஞ்சநாடு பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று வியாழக்கிழமை பகல் நேரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. பின்னா் அந்த வழியாக வாகனங்கள் வருவதை பாா்த்து வனப் பகுதிக்குள் சென்று மறைந்தது. இதன் காரணமாக தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள், பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.