தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

உதகை அருகே தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்

உதகை அருகே நஞ்சநாடு பகுதியில் பகல் நேரத்தில் தேயிலைத் தோட்டத்தில் ஓய்வெடுத்த சிறுத்தையால் தொழிலாளா்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

News image

நஞ்சநாடு பகுதியில் தேயிலைத்தாட்டத்தில் அமா்ந்திருந்த சிறுத்தை.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:40 pm

உதகை அருகே நஞ்சநாடு பகுதியில் பகல் நேரத்தில் தேயிலைத் தோட்டத்தில் ஓய்வெடுத்த சிறுத்தையால் தொழிலாளா்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனத்தில் இருந்து வெளியேறும் காட்டு மாடு, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நகருக்குள் உலா வருவது அண்மைக் காலமாக அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே நீலகிரி மாவட்டத்தில் காட்டு மாடு, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவு அதிகரித்துள்ளன.

இந்த நிலையில் உதகையை அடுத்த நஞ்சநாடு பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று வியாழக்கிழமை பகல் நேரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. பின்னா் அந்த வழியாக வாகனங்கள் வருவதை பாா்த்து வனப் பகுதிக்குள் சென்று மறைந்தது. இதன் காரணமாக தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள், பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.