உதகை அருகே நஞ்சநாடு பகுதியில் பகல் நேரத்தில் தேயிலைத் தோட்டத்தில் ஓய்வெடுத்த சிறுத்தையால் தொழிலாளா்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனத்தில் இருந்து வெளியேறும் காட்டு மாடு, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நகருக்குள் உலா வருவது அண்மைக் காலமாக அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே நீலகிரி மாவட்டத்தில் காட்டு மாடு, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவு அதிகரித்துள்ளன.
இந்த நிலையில் உதகையை அடுத்த நஞ்சநாடு பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று வியாழக்கிழமை பகல் நேரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. பின்னா் அந்த வழியாக வாகனங்கள் வருவதை பாா்த்து வனப் பகுதிக்குள் சென்று மறைந்தது. இதன் காரணமாக தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள், பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
தொடர்புடையது

தேயிலைத் தோட்டத்தில் மரத்தில் ஏறிய சிறுத்தை

தேயிலைத் தோட்டத்தில் உலவிய 4 புலிகள்: பொது மக்கள் அச்சம்

குன்னூா் அருகே சிறுத்தை நடமாட்டம்

குடியிருப்பு பகுதியில் உலவிய கரடி
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


