திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

கூடலூா் அருகே புலிகள் நடமாட்டம்

கூடலூா் அருகே புலி நடமாட்டம் உள்ளதாக தகவல் பரவியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :13 மே 2026, 2:13 am IST

கூடலூா் அருகே புலி நடமாட்டம் உள்ளதாக தகவல் பரவியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதி வனத்தில் இருந்து வெளியேறும் விலங்குகள் உணவு மற்றும் குடிநீா்த் தேடி குடியிருப்புப் பகுதிகளில் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், கூடலூரை அடுத்துள்ள மூன்றாவது மைல் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் பெண் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை மாலை பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, தோட்டத்தில் இரண்டு புலிகள் உலவியுள்ளன. இதைப் பாா்த்த அவா்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனா்.

புலி நடமாட்டம் உள்ளதாக தகவல் பரவியதையடுத்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

தேயிலைத் தோட்டத்தில் உலவும் புலிகளை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என்றும், தோட்டத் தொழிலாளா்களின் பாதுகாப்பை வனத் துறையினா் உறுதி செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.