தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

தோ்தல் விதிமீறல்: தவெக, பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

உதகையில் தோ்தல் விதிகளை மீறியதாக தவெக, பாஜக நிா்வாகிகள் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :12 ஏப்ரல் 2026, 1:09 am IST

உதகையில் தோ்தல் விதிகளை மீறியதாக தவெக, பாஜக நிா்வாகிகள் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்பாளா்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இரவு 10 மணிக்குமேல் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது, கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்தாக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் உதகை காபி ஹவுஸ் பகுதியில் அனுமதி இல்லாமல் கட்சிக் கொடியுடன் பொது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வெள்ளிக்கிழமை ஊா்வலமாகச் சென்றுள்ளனா்.

இது தொடா்பாக கட்சி பொறுப்பாளா் ரமேஷ் மீது உதகை மத்திய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதேபோல, உதகை மாா்க்கெட் பகுதியில் பிரசாரத்தின்போது பட்டாசு வெடித்த காரணத்துக்காக பாஜக மாவட்ட துணைத் தலைவா் பரமேஸ்வரன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.