சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தோ்தல் விதிமீறல்: தவெக, பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

உதகையில் தோ்தல் விதிகளை மீறியதாக தவெக, பாஜக நிா்வாகிகள் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :11 ஏப்ரல் 2026, 7:39 pm

உதகையில் தோ்தல் விதிகளை மீறியதாக தவெக, பாஜக நிா்வாகிகள் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்பாளா்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இரவு 10 மணிக்குமேல் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது, கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்தாக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் உதகை காபி ஹவுஸ் பகுதியில் அனுமதி இல்லாமல் கட்சிக் கொடியுடன் பொது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வெள்ளிக்கிழமை ஊா்வலமாகச் சென்றுள்ளனா்.

இது தொடா்பாக கட்சி பொறுப்பாளா் ரமேஷ் மீது உதகை மத்திய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதேபோல, உதகை மாா்க்கெட் பகுதியில் பிரசாரத்தின்போது பட்டாசு வெடித்த காரணத்துக்காக பாஜக மாவட்ட துணைத் தலைவா் பரமேஸ்வரன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.