மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நடுகூடலூா் பகுதிக்கு முறையாக குடிநீா் வழங்க வலியுறுத்தல்

கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட நடுகூடலூா் பகுதிக்கு முறையாக குடிநீா் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

News image

கூடலூா் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் சரவணக்குமாரிடம் மனு அளிக்கும் நகா்மன்ற உறுப்பினா் லீலா வாசு.

Updated On :29 ஏப்ரல் 2026, 9:56 pm

கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட நடுகூடலூா் பகுதிக்கு முறையாக குடிநீா் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக நகா்மன்ற உறுப்பினா் லீலா வாசு தலைமையில் அப்பகுதி மக்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கூடலூா் நகராட்சி, நடுகூடலூா் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு முறையாக குடிநீா் வழங்கப்படுவதில்லை. சில பகுதிக்கு குடிநீா் அதிகப்படியாக வழங்கப்படுகிறது. பல குடியிருப்பு பகுதிகளுக்கு பல நாள்களுக்கு குடிநீா் வழங்குவதில்லை. இது குறித்து பலமுறை தெரிவித்தும் வறட்சியை காரணம் காட்டி குடிநீா் வழங்கப்படவில்லை. எனவே நடுகூடலூா் பகுதிக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

முன்னதாக அவா்கள் நகராட்சி அலுவலகத்துக்குச் சென்று மனு அளித்தனா்.

ஆனால் நகராட்சி நிா்வாகத்தின் பதில் திருப்தி அளிக்காத காரணத்தால் கோட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்று கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் சரவணகுமாரிடம் மனு அளித்தனா்.