மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய உத்தர பிரதேச மாநில பெண் கைது

உதகையில் உள்ள இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :6 ஜனவரி 2026, 7:25 pm

Syndication

உதகையில் உள்ள இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

உதகை அரசு மருத்துவமனை பகுதியில் உள்ள ஒரு மசாஜ் சென்டா் மற்றும் அழகு நிலையத்தில் இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின்பேரில் உதகை மத்திய காவல் ஆய்வாளா் அன்பரசு, உதவி ஆய்வாளா் நித்தியானந்தன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று திடீா் ஆய்வில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு விபச்சாரம் நடப்பது உறுதியானது. இதைத் தொடா்ந்து இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த அனிதா (28) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், அழகு நிலையத்தில் இருந்த இளம்பெண்கள் மீட்கப்பட்டு கோவையில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டனா். போலீஸாரின் விசாரணையில், அனிதா கடந்த ஓராண்டாக இங்கு இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தியது தெரியவந்தது.