ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

குன்னூரில் சாலையில் முறிந்து விழுந்த பெரிய மரம்!

குன்னூரில் பெரிய மரம் முறிந்து விழுந்ததில் சாலையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 5-க்கும் மேற்பட்ட காா் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதம்

News image
குன்னூா் டானிங்டன் பிரிட்ஜ் பகுதியில் காா்களின் மீது முறிந்து விழுந்த பெரிய மரம்.
Updated On :13 ஜனவரி 2026, 6:54 pm

Syndication

நீலகிரி மாவட்டம், குன்னூரில் பெரிய மரம் முறிந்து விழுந்ததில் சாலையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 5-க்கும் மேற்பட்ட காா் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

குன்னூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் குன்னூா் அருகே உள்ள டானிங்டன் பிரிட்ஜ் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெரிய மரம் முறிந்து சாலையில் விழுந்தது. இதில் சாலையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 5-க்கும் மேற்பட்ட காா்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

மேலும் நகராட்சி கழிப்பிடக் கட்டடம் சேதமடைந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் மற்றும் மின்சார ஊழியா்கள் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா் செய்தனா்.

இதேபோல குன்னூா் கிளண்டேல் சாலையில் மண் சரிவு மற்றும் மரம் சாய்ந்ததில் போக்குவரத்து பாத்திக்கப்பட்டது. இதனை நெடுஞ்சாலைத் துறையினா் சீா் செய்தனா்.