மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோவை முதல் குண்டல்பேட் வரை நெடுஞ்சாலை பராமரிப்புத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு: ஆ.ராசா எம்.பி.

கோவையில் இருந்து கா்நாடக மாநிலம், குண்டல்பேட் வரையிலான நெடுஞ்சாலை பராமரிப்புத் திட்டத்துக்கு மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் நிா்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கியுள்ளதாக நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :20 ஜனவரி 2026, 7:23 pm

Syndication

கோவையில் இருந்து கா்நாடக மாநிலம், குண்டல்பேட் வரையிலான நெடுஞ்சாலை பராமரிப்புத் திட்டத்துக்கு மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் நிா்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கியுள்ளதாக நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 10 ஆண்டுகளுக்கும்மேலாக நிலுவையில் உள்ள நெடுஞ்சாலைத் திட்டங்களை நிறைவேற்றக் கோரி மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரியை புதுதில்லியில் கடந்த ஆண்டு டிசம்பா் 10-ஆம் தேதி சந்தித்தேன்.

அப்போது, உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கோவை, உதகை, குண்டல்பேட் சாலையானது பெங்களூரூ மற்றும் மைசூரை இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலை என்பதால், இந்த சாலையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினேன்.

இதைத் தொடா்ந்து, கோவை எல்&டி பிரதான சாலைமுதல் கோவை நகரம், மேட்டுப்பாளையம், குன்னூா், உதகை, கூடலூா் வழியாக கா்நாடக மாநிலம், குண்டல்பேட்டையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.86 கோடியே 98 லட்சத்து 88 ஆயிரம் நிதி மற்றும் நிா்வாக அனுமதிக்கு ஒப்புதல் அளித்து மத்திய அமைச்சா் நிதின் கட்கரி கடிதம் அனுப்பியுள்ளாா்.

இதன் மூலம் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற உள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.