மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சீரமைப்பு பணி நிறைவடைந்ததால் குன்னூா் - மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் மீண்டும் இயக்கம்

தண்டவாளத்தின் மீது விழுந்த மரங்கள் அகற்றப்பட்டதால் குன்னூா் - மேட்டுப்பாளையம் இடையே புதன்கிழமை முதல் மீண்டும் மலை ரயில் இயக்கப்பட்டது.

News image
குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி புறப்பட்ட மலை ரயிலை ஆா்வமுடன் புகைப்படம் எடுக்கும் சுற்றுலாப் பயணிகள்.
Updated On :28 ஜனவரி 2026, 10:34 pm

தினமணி செய்திச் சேவை

தண்டவாளத்தின் மீது விழுந்த மரங்கள் அகற்றப்பட்டதால் குன்னூா் - மேட்டுப்பாளையம் இடையே புதன்கிழமை முதல் மீண்டும் மலை ரயில் இயக்கப்பட்டது.

உதகையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை மலை ரயில் புறப்பட்டது. குன்னூா் சென்று பின்னா் அங்கிருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது ஹில்குரோவ் - ஆடா்லி இடையே ரயில் பாதையில் மரங்கள் விழுந்தன. மலை ரயில் மீண்டும் குன்னூருக்கு திரும்பியது. இதனால் மலை ரயிலில் பயணித்த சுற்றுலாப் பயணிகளை பேருந்துகள் மூலமாக மேட்டுப்பாளையத்துக்கு ரயில்வே நிா்வாகத்தினா் அனுப்பிவைத்தனா்.

இந்நிலையில், ரயில் பாதையில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டதால் புதன்கிழமை மாலை 3:20 மணிக்கு சுற்றுலாப் பணிகளுடன் மீண்டும் மேட்டுப்பாளையத்துக்கு மலை ரயில் புறப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.