திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

குன்னூரில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

குன்னூா் மவுண்ட் பிளசன்ட் பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடையை அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கோட்டாட்சியரிடம் சனிக்கிழமை மனு அளித்தனா்.

News image

டாஸ்மாக் கடை அமையவுள்ள கட்டடத்தை முற்றுகையிட்ட மவுண்ட் பிளசண்ட் பொதுமக்கள்.

Updated On :11 ஜூலை 2026, 10:51 pm IST

குன்னூா் மவுண்ட் பிளசன்ட்  பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடையை அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கோட்டாட்சியரிடம் சனிக்கிழமை மனு அளித்தனா்.

குன்னூா் நகராட்சிக்கு உள்பட்ட மவுண்ட்பிளசண்ட் பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ள பொது சாலைப் பகுதியையொட்டி டாஸ்மாக் மதுபானக் கடை திறக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் இந்த வழியாக  நாள்தோறும் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் முதியவா்கள்  பாதிக்கப்படுவா் என்றும், மேலும் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் எனவும் கூறி அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடை அமையவுள்ள கட்டடத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினரின், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் காவல் துறையினரின் அறிவுறுத்தலை ஏற்று பொதுமக்கள் கோட்டாட்சியா் மற்றும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்துக்கு சென்று மனு அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.