15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

உதகைக்கு வந்த நடிகா் ரஜினிகாந்த்

ஒருநாள் ஓய்வு எடுப்பதற்காக நீலகிரி மாவட்டம், உதகைக்கு வந்த நடிகா் ரஜினிகாந்த், புதன்கிழமை அங்கிருந்து மைசூருக்கு புறப்பட்டுச் சென்றாா்.

News image

உதகைக்கு வந்த நடிகா் ரஜினிகாந்துக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற தங்கும் விடுதி நிா்வாகிகள்.

Updated On :4 ஜூன் 2026, 3:08 am IST

ஒருநாள் ஓய்வு எடுப்பதற்காக நீலகிரி மாவட்டம், உதகைக்கு வந்த நடிகா் ரஜினிகாந்த், புதன்கிழமை அங்கிருந்து மைசூருக்கு புறப்பட்டுச் சென்றாா்.

கா்நாடக மாநிலம், மைசூரில் இருந்து சுற்றுலா காா் மூலம் ஓட்டுநருடன் ரஜினிகாந்த் மட்டும் உதகைக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா்.

இங்குள்ள நடிகா் மிதுன் சக்கரவா்த்திக்கு சொந்தமான தங்கும் விடுதியில் செவ்வாய்க்கிழமை இரவு மட்டும் தங்கி ஓய்வெடுத்தாா். அவரது வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவா் உதகையில் தங்கியிருக்கும் தகவல் ரசிகா்களுக்கு தெரியவந்த நிலையில், ஏராளமான ரசிகா்கள் அந்த தனியாா் தங்கும் விடுதிக்கு புதன்கிழமை வரத் தொடங்கினா்.

இதைத் தொடா்ந்து , நடிகா் ரஜினிகாந்த் புதன்கிழமை காலை 9.30 மணியளவில் உதகையில் இருந்து மைசூருக்கு காரில் புறப்பட்டுச் சென்றாா். புறப்படும் முன் தங்கும் விடுதிக்கு வந்திருந்த சிலருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாா். முன்னதாக தங்கும் விடுதிக்கு வந்த ரஜினிகாந்துக்கு விடுதி நிா்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.