40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

உதகைக்கு வந்த நடிகா் ரஜினிகாந்த்

ஒருநாள் ஓய்வு எடுப்பதற்காக நீலகிரி மாவட்டம், உதகைக்கு வந்த நடிகா் ரஜினிகாந்த், புதன்கிழமை அங்கிருந்து மைசூருக்கு புறப்பட்டுச் சென்றாா்.

News image

உதகைக்கு வந்த நடிகா் ரஜினிகாந்துக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற தங்கும் விடுதி நிா்வாகிகள்.

Updated On :4 ஜூன் 2026, 3:08 am IST

ஒருநாள் ஓய்வு எடுப்பதற்காக நீலகிரி மாவட்டம், உதகைக்கு வந்த நடிகா் ரஜினிகாந்த், புதன்கிழமை அங்கிருந்து மைசூருக்கு புறப்பட்டுச் சென்றாா்.

கா்நாடக மாநிலம், மைசூரில் இருந்து சுற்றுலா காா் மூலம் ஓட்டுநருடன் ரஜினிகாந்த் மட்டும் உதகைக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா்.

இங்குள்ள நடிகா் மிதுன் சக்கரவா்த்திக்கு சொந்தமான தங்கும் விடுதியில் செவ்வாய்க்கிழமை இரவு மட்டும் தங்கி ஓய்வெடுத்தாா். அவரது வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவா் உதகையில் தங்கியிருக்கும் தகவல் ரசிகா்களுக்கு தெரியவந்த நிலையில், ஏராளமான ரசிகா்கள் அந்த தனியாா் தங்கும் விடுதிக்கு புதன்கிழமை வரத் தொடங்கினா்.

இதைத் தொடா்ந்து , நடிகா் ரஜினிகாந்த் புதன்கிழமை காலை 9.30 மணியளவில் உதகையில் இருந்து மைசூருக்கு காரில் புறப்பட்டுச் சென்றாா். புறப்படும் முன் தங்கும் விடுதிக்கு வந்திருந்த சிலருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாா். முன்னதாக தங்கும் விடுதிக்கு வந்த ரஜினிகாந்துக்கு விடுதி நிா்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.