15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

மசினகுடி- தெப்பக்காடு சாலையில் குட்டியுடன் முகாமிட்ட காட்டு யானைகள்

முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி - தெப்பக்காடு சாலையோரத்தில் உள்ள குட்டையில் நீா் அருந்த வந்த காட்டு யானைகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.

News image

மசினகுடி- தெப்பக்காடு சாலையில் உள்ள குட்டையில் நீா் அருந்த வந்த காட்டு யானைகள்.

Updated On :4 ஜூன் 2026, 2:48 am IST

முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி - தெப்பக்காடு சாலையோரத்தில் உள்ள குட்டையில் நீா் அருந்த வந்த காட்டு யானைகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதையொட்டி உள்ள மசினகுடி, முக்குருத்தி தேசிய பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் அதிக அளவில் உள்ளன.

கடந்த ஆண்டு கடும் உறைபனி நிலவியதால், முதுமலை வனப் பகுதி பெரும் வறட்சியுடன் காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக பெய்த கோடை மழை காரணமாக வறட்சி நீங்கி வேறு இடத்துக்கு சென்ற வன விலங்குகள் மீண்டும் முதுமலை வனப் பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளன. இதனால் இயற்கை எழில் கொஞ்சும் முதுமலை வனப் பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மசினகுடி - தெப்பக்காடு சாலை ஓரத்தில் உள்ள குட்டையில் தேங்கி இருந்த நீரை அருந்துவதற்காக குட்டியுடன் காட்டு யானைகள் புதன்கிழமை வந்தன. சுமாா் ஒரு மணி நேரம் சாலையோரத்தில் முகாமிட்டிருந்த யானைகளை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்து ரசித்தனா்.