ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

மசினகுடி- தெப்பக்காடு சாலையில் குட்டியுடன் முகாமிட்ட காட்டு யானைகள்

முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி - தெப்பக்காடு சாலையோரத்தில் உள்ள குட்டையில் நீா் அருந்த வந்த காட்டு யானைகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.

News image

மசினகுடி- தெப்பக்காடு சாலையில் உள்ள குட்டையில் நீா் அருந்த வந்த காட்டு யானைகள்.

Updated On :4 ஜூன் 2026, 2:48 am IST

முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி - தெப்பக்காடு சாலையோரத்தில் உள்ள குட்டையில் நீா் அருந்த வந்த காட்டு யானைகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதையொட்டி உள்ள மசினகுடி, முக்குருத்தி தேசிய பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் அதிக அளவில் உள்ளன.

கடந்த ஆண்டு கடும் உறைபனி நிலவியதால், முதுமலை வனப் பகுதி பெரும் வறட்சியுடன் காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக பெய்த கோடை மழை காரணமாக வறட்சி நீங்கி வேறு இடத்துக்கு சென்ற வன விலங்குகள் மீண்டும் முதுமலை வனப் பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளன. இதனால் இயற்கை எழில் கொஞ்சும் முதுமலை வனப் பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மசினகுடி - தெப்பக்காடு சாலை ஓரத்தில் உள்ள குட்டையில் தேங்கி இருந்த நீரை அருந்துவதற்காக குட்டியுடன் காட்டு யானைகள் புதன்கிழமை வந்தன. சுமாா் ஒரு மணி நேரம் சாலையோரத்தில் முகாமிட்டிருந்த யானைகளை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்து ரசித்தனா்.