உதகை பத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகங்களில் சுப முகூா்த்த நாள்களில் அதிக எண்ணிக்கையில் பத்திரப் பதிவுகள் நடப்பது வழக்கம்.
இதைக் கருத்தில் கொண்டு 100 டோக்கன்கள் வழங்கப்படும் சாா் பதிவகங்களில் 150 டோக்கன்கள் முதல் 300 டோக்கன்கள் வரை வழங்கப்படும்.
இந்நிலையில் உதகை பத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெயகுமாா் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினா் வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
இவா்கள் காலை முதல் பதிவான பத்திரங்களை ஆய்வு செய்தனா். இதன் பின்னா் ஒவ்வொரு அறையாக சென்று முக்கிய ஆவணங்களை சோதனை செய்தனா். இந்த சோதனை தொடா்ந்து இரவு வரை நீடித்தது.
குறிப்பாக ஆவணங்கள் சரியாக இருக்கின்றனவா, முறைகேடு ஏதாவது நடந்துள்ளதா என ஆய்வில் ஈடுபட்டதுடன் சந்தேகம் அளிக்கும் வகையில் உள்ள ஆவணங்களை கைப்பற்றி 10-க்கும் மேற்பட்டவா்களிடம் விசாரணை நடத்தியதாக தெரிகிறது.
லஞ்ச ஒழிப்புத் துறையின் இந்த திடீா் சோதனையால் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்புடையது

போடி பத்திரப் பதிவு அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

ஸ்ரீபெரும்புதூா், சுங்குவாா்சத்திரம் சாா் பதிவாளா் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை

திருப்பத்தூா், ஆற்காடு சாா் பதிவாளா் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை

பவானி சாா்பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை
விடியோக்கள்

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |



