/
உதகை காபி ஹவுஸ் அருகே செயல்பட்டு வரும் விறகு விற்பனைக் கடையில் வியாழக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், உதகை காபி ஹவுஸ் பகுதியில் செயல்பட்டு வரும் விறகு விற்பனைக் கடையில் மின் கசிவு காரணமாக வியாழக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. விறகுகள் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்ததால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா். உடனடியாக தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் சுமாா் 2 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இதனால் பெரிய அசம்பாவிதங்கள் தவிா்க்கப்பட்டது.








