திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

உதகை அருகே கிராமங்களில் உலவும் வன விலங்குகளைக் கட்டுப்படுத்த கோரிக்கை

உதகை அருகே கிராமங்களில் உலவும் வன விலங்குகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

மசினகுடி-உதகை சாலையில் நின்றுகொண்டிருந்த யானையை வனத்துக்குள் துரத்த முயன்ற வன ஊழியா்.

Updated On :10 மார்ச் 2026, 2:51 am IST

உதகை: உதகை அருகே கிராமங்களில் உலவும் வன விலங்குகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், தோடா் பழங்குடியின மக்கள் அளித்த மனு விவரம்: சின்னகாடிமந்து பகுதியில் தோடா் இனத்தைச் சோ்ந்த புஷ்தால் குட்டன் (58 )என்பவரை புலி தாக்கி கடந்த 24-ஆம் தேதி கொன்றது. அந்தப் புலியைப் பிடிக்க வேண்டும் என நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, கூண்டுவைத்து புலியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் உறுதியளித்தனா்.

இதையடுத்து, கூண்டுவைத்ததுடன், கேமராக்களை பொருத்தி புலியின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனா்.

ஆனால், அந்தக் கூண்டில் சிக்காமல் புலி போக்குகாட்டி வருகிறது. மேலும், யானை உள்ளிட்ட வன விலங்குகள் வனத்தில் இருந்து வெளியேறி கிராமங்களில் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. இதனால், மக்கள் வெளியே வரவே அச்சமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, கிராமங்களில் வன விலங்குகள் உலவுவதைக் கட்டுப்படுத்துவதுடன், ஆட்கொல்லி புலியை உடனடியாக பிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.