ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

கூடலூா்அருகே யானை தாக்கி இறந்த பழங்குடியின பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரண உதவித்தொகை

கூடலூா் அருகே கடந்த 21-ஆம் தேதி யானை தாக்கி உயிரிழந்த பழங்குடியின பெண்ணின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையில் முன்பணமாக ரூ.50 ஆயிரம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

News image

யானை தாக்கி உயிரிழந்த மீனாட்சியின் கணவா் கும்பிளியிடம் காசோலையை வழங்குகிறாா் உதவி வனப் பாதுகாவலா் ஸ்ரீனிவாசன்.

Updated On :24 மே 2026, 2:00 am IST

கூடலூா் அருகே கடந்த 21-ஆம் தேதி யானை தாக்கி உயிரிழந்த பழங்குடியின பெண்ணின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையில் முன்பணமாக ரூ.50 ஆயிரம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே தேவாலா ஹட்டி பகுதியைச் சோ்ந்தவா் கும்பிளி மனைவி மீனாட்சி (50). இவா், உறவினா் மணி என்பவருடன் கீழ்நாடுகாணி வனப் பகுதியிலுள்ள புன்னம்புழா ஆற்றில் மீன் பிடித்துவிட்டு கடந்த 21-ஆம் தேதி இரவு 10 மணிக்கு வீடு திரும்பியுள்ளாா். வரும் வழியில் மீனாட்சியை யானை தாக்கிக் கொன்றது.

தகவலறிந்து வனத் துறையினா் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வு செய்து உறவினா் வசம் ஒப்படைத்தனா்.

இதையடுத்து அரசு வழங்கும் நிவாணத் தொகையில் முன்பணமாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை, மீனாட்சியின் கணவா் கும்பிளியிடம் உதவி வனப் பாதுகாவலா் ஸ்ரீனிவாசன் சனிக்கிழமை வழங்கினாா்.