நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

உழவாலயம் அமைக்க 6-ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா

பல்லடத்தில் உழவாலயம் அமைக்க மார்ச் 6-ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

பல்லடத்தில் உழவாலயம் அமைக்க மார்ச் 6-ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது.

உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உலக நலன் கருதி 108 கோமாதா பூஜை, உழவர் வளம் காண 108 யாக வேள்வி, உழவாலயம் அடிக்கல் நாட்டு விழா மார்ச் 6-ஆம் தேதி காலை 6 மணி முதல் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை  கூறியதாவது:

பல்லடம், கோடங்கிபாளையத்தில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 80 சென்ட் நிலத்தில் அனைத்து விவசாயிகளும் பயன் பெறும் வகையில் உழவாலயம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவையொட்டி உழவர் நலமும், வளமும் பெற 108 கோமாதா, யாக வேள்வி பூஜை நடைபெறும். இதை கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வரசுவாமிகள் முன்நின்று நடத்தி வைக்கவுள்ளார் என்றார்.

இப்பேட்டியின்போது உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலப் பொருளாளர் பாலசுப்பிரமணியம், மாநிலச் செயலாளர் ஈஸ்வரன், திருப்பூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் வாவிபாளையம் சோமசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.