உடுமலை அருகே மது அருந்த பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை, தந்தையே கொலை செய்துவிட்டார்.
உடுமலை வட்டம், பூலாங்கிணறு அருகே உள்ள சடையபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து (37). இவரது மனைவி பாக்கியம். இவர்களது மகன் சசிகுமார்(37). செல்லமுத்து தனது மனைவியுடன் உடுமலை அருகே ராமேகவுண்டன்புதூர் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் தங்கி வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை ராமேகவுண்டன்புதூர் சென்ற சசிகுமார், மது அருந்தப் பணம் தருமாறு கேட்டு, தனது தாயாரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது, அங்கு வந்த செல்லமுத்து தனது மகனை சமாதானம் செய்துள்ளார். ஆனால், சசிகுமார் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டாராம். இதனால், ஆத்திரமடைந்த செல்லமுத்து, அங்கிருந்த கோடரியால் சசிகுமாரைத் தாக்கியுள்ளார். இதனால், தலையில் பலத்த காயம் அடைந்த சசிகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் கிடைத்தும் அமராவதி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, விசாரணை நடத்தி செல்லமுத்துவை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.