பல்லடம் - கோவை பிரதான சாலையில் கொங்கு வேளாளர் திருமண மண்டபம் அருகில் உள்ள சிட்ரா விசைத்தறி பணி மையத்தில் மத்திய அரசின் உதவித் தொகையுடன் கூடிய இலவசத் தையல் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு 45 நாள்கள் இந்த இலவசத் தையல் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இப்பயிற்சியின்போது உதவித் தொகையாக ரூ. 1,000 வழங்கப்படுகிறது. பிளவுஸ், சுடிதார், நைட்டி, பெட்டி கோட், பட்டியாலா உள்ளிட்டவை தைக்க கற்று தரப்படுகிறது.
இதில், குறைந்தபட்சம் 6-ஆம் வகுப்பு படித்திருப்பவர்கள் சேரலாம். தினசரி காலை 9.30 மணி முதல் 4.30 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்குத் தேவையான உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படும்.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினராக இருந்தால் அதற்குரிய ஜாதிச் சான்றுகளைச் சமர்ப்பிக்கவேண்டும். பயிற்சி பெறுபவர்கள், தைப்பதற்கான துணிகளை மட்டும் எடுத்துவர வேண்டும்.
இம்மாத இறுதியில் இலவசத் தையல் பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளதால் உடனடியாக முன்பதிவு செய்வது அவசியம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.