அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பண்டிகை சமயத்தில் திருட்டைத் தடுப்பது எப்படி? விழிப்புணர்வூட்டும் காவல் துறை

தீபாவளி பண்டிகை சமயத்தில் திருட்டைத் தடுக்க பொது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென காவல் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 4:07 am

DIN

தீபாவளி பண்டிகை சமயத்தில் திருட்டைத் தடுக்க பொது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெள்ளக்கோவில் போலீஸார் விடுத்துள்ள அறிவிப்பு:
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், வீடுகளில் அதிக அளவில் பணம், தங்க நகைகள் இருக்கலாமெனக் கருதி,  திருடலாம் என்கிற எண்ணத்தில் அந்நிய நபர்களின் நடமாட்டம் இருந்து வருகிறது. எனவே, பகல், இரவு எந்நேரமும் சிறிது நேரமே வீட்டைவிட்டுச் சென்றாலும்கூட அண்டை வீட்டினரிடம் கண்காணிக்கச் சொல்லவும்.  
இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தியபடி தெருவிலோ, பூட்டிய வீட்டின் அருகிலோ அந்நிய நபர்கள் நின்றிருந்தால், காவல் துறைக்கு உடனே தகவல் தெரிவிக்கவும்.
பண்டிகைச் செலவுக்கென வங்கிகளில் பணம் எடுக்கும்போது, உடன் ஒருவரை அழைத்துச் செல்லவும்.
உங்கள் உடலில் அரிப்புப் பொடிகளைத் தூவியும், ஆடைகளை அசிங்கப்படுத்தியும், ரூபாய் நோட்டுகளைக் கீழே போட்டு கவனத்தைத் திசை திருப்பியும் உங்கள் பொருளை மர்ம நபர்கள் திருடிச் செல்லலாம்.
வீடுகளுக்கு வந்து டெங்கு காய்ச்சலுக்குத் தடுப்பூசி போடுவதாகக் கூறி மயக்க ஊசி போட்டும் கொள்ளை நடைபெற்றுள்ளது. எனவே பொது மக்கள் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.