உடுமலையில் கடந்த 15 நாள்களாக நடைபெற்று வந்த ஜமாபந்தி (வருவாய்த் தீர்வாயம்) வியாழக்கிழமை நிறைவு பெற்றது.
உடுமலை வட்ட வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் எஸ்.அசோகன் தலைமையில் கடந்த மே 22ஆம் தேதி தொடங்கி, 15 நாள்களாக நடைபெற்று வந்தது.
இதில், மொத்தம் 75 வருவாய் கிராமங்களின் வரவு, செலவுக் கணக்குகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. கிராம மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 1,232 மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டன.
இதில், பெரும்பாலான மனுக்கள் முதியோர் உதவித் தொகை கோரி அளிக்கப்பட்டிருந்தன. 420 மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.
ஜமாபந்தி நிறைவு விழா வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கோட்டாட்சியர் எஸ்.அசோகன், வட்டாட்சியர் தங்கவேல், துணை வட்டாட்சியர் பொன்ராஜ், வருவாய்த் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோத்தகிரி அருகே குடியிருப்புப் பகுதியில் கரடியை துரத்திய நாய்

பவானி அருகே இருசக்கர வாகனங்கள் மீது காா் மோதியதில் சித்த மருத்துவா் உயிரிழப்பு

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு கிடப்பில் போடப்பட்ட சாலை அமைப்புப் பணி: பொதுமக்கள் அவதி

குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


