சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

எருமையைக் கடத்திய இருவரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்த பொது மக்கள்

அவிநாசியில் பட்டப் பகலில் எருமையைத் திருடிச் சென்ற இருவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து அவிநாசி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ஒப்படைத்தனர்.

Updated On :26 ஜூன் 2018, 7:29 am IST

அவிநாசியில் பட்டப் பகலில் எருமையைத் திருடிச் சென்ற இருவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து அவிநாசி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ஒப்படைத்தனர்.
அவிநாசி, கைகாட்டிப்புதூரைச் சேர்ந்தவர் முருகசாமி. இவரது மனைவி செல்வமணி (57). இவர் தனது எருமையை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு மீண்டும் வீட்டின் அருகே இருந்த தோட்டத்தில் கட்டி வைத்துள்ளார். வீட்டுக்குள் சென்றுவிட்டு சிறிது நேரத்துக்குப் பின் வந்து பார்த்தபோது எருமையை காணவில்லை. சத்தம் போட்டவுடன், அருகில் இருந்தவர், இரு நபர்கள் சரக்கு வேனில் வந்து எருமையை ஏற்றிக் கொண்டு சென்றுகொண்டிருப்பதாகக் கூறினர்.
இதையடுத்து செல்வமணியின் உறவினர்கள் விரைந்து சென்று பார்த்த போது அவிநாசி - திருப்பூர் சாலையில் பெட்ரோல்  நிரப்புவதற்காக அந்த சரக்கு வேன் எருமையுடன் நின்றுகொண்டிருந்தது. இதையடுத்து வேனில் இருந்த இருவருக்கும் தர்ம அடிகொடுத்து அவிநாசி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர்கள் பல்லடம் 65-வேலம்பாளையத்தைச் சேர்ந்த ஞானசேகரன் மகன் சிவா (எ) சிவானந்தன் (29), வேனை ஓட்டிவந்தவர் சோளிபாளையத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைதுசெய்தனர். மேலும், சரக்குவேன், எருமையை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.