குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சிவன்மலையில் 2,000 பேர் தியானப் பயிற்சி

காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் தேர்த் திருவிழாவை ஒட்டி  மலை அடிவாரத்தில் தியானப் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.

Updated On :23 ஜனவரி 2019, 9:44 am IST

காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் தேர்த் திருவிழாவை ஒட்டி  மலை அடிவாரத்தில் தியானப் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
காங்கயத்தில் உள்ள ஸ்ரீராம்சந்த் மித்ர மிஷன் சார்பில் சிவன்மலை அடிவாரத்தில் உள்ள சர்வோதய சங்க வளாகத்தில் திங்கள்கிழமை முதல் தியானப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. புதன்கிழமை (ஜனவரி 23) வரை இந்த முகாம் நடைபெற உள்ளது. 
இதில் பங்கேற்கும் அனைவருக்கும் 20 நிமிட இதய நிறைவு தியானப் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. திங்கள், செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களில் 2 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். குழந்தைகளுக்கு நுண்ணறிவை வளர்க்கும் விதமான பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. இதில், தியானம், யோகாசனம் தொடர்பான புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது.
காங்கயம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சார்பில் அரங்கு அமைக்கப்பட்டு அனைவருக்கும் இலவசமாக சித்த மருந்துகளும், மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. ஸ்ரீராம்சந்த் மித்ர மிஷன் ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே.செந்தில்குமார்,  அரசு சித்த மருத்துவ அலுவலர்கள் தமிழ்வாணன் (காங்கயம்), சரண்யா (சாவடிப்பாளையம்), ஸ்ரீ ராம்சந்த் மித்ர மிஷன் இயக்கத்தைச் சேர்ந்த 50 பயிற்சி ஆசிரியர்கள், 75 தன்னார்வலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.