ம.பி. படகு விபத்து: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு மே 13-15இல் சீனா செல்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

சிவன்மலையில் 2,000 பேர் தியானப் பயிற்சி

காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் தேர்த் திருவிழாவை ஒட்டி  மலை அடிவாரத்தில் தியானப் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.

Updated On :23 ஜனவரி 2019, 9:44 am IST

காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் தேர்த் திருவிழாவை ஒட்டி  மலை அடிவாரத்தில் தியானப் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
காங்கயத்தில் உள்ள ஸ்ரீராம்சந்த் மித்ர மிஷன் சார்பில் சிவன்மலை அடிவாரத்தில் உள்ள சர்வோதய சங்க வளாகத்தில் திங்கள்கிழமை முதல் தியானப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. புதன்கிழமை (ஜனவரி 23) வரை இந்த முகாம் நடைபெற உள்ளது. 
இதில் பங்கேற்கும் அனைவருக்கும் 20 நிமிட இதய நிறைவு தியானப் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. திங்கள், செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களில் 2 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். குழந்தைகளுக்கு நுண்ணறிவை வளர்க்கும் விதமான பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. இதில், தியானம், யோகாசனம் தொடர்பான புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது.
காங்கயம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சார்பில் அரங்கு அமைக்கப்பட்டு அனைவருக்கும் இலவசமாக சித்த மருந்துகளும், மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. ஸ்ரீராம்சந்த் மித்ர மிஷன் ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே.செந்தில்குமார்,  அரசு சித்த மருத்துவ அலுவலர்கள் தமிழ்வாணன் (காங்கயம்), சரண்யா (சாவடிப்பாளையம்), ஸ்ரீ ராம்சந்த் மித்ர மிஷன் இயக்கத்தைச் சேர்ந்த 50 பயிற்சி ஆசிரியர்கள், 75 தன்னார்வலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.