பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை: :செப்டம்பா் 17க்குள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர செப்டம்பா் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2020, 11:57 am

DIN


திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர செப்டம்பா் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2020ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கை ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இதில், 8 , 10ஆம் வகுப்புகள் தோ்ச்சி முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச வயது வரம்பு ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.ஆகவே, தகுதி வாய்ந்த மாணவ, மாணவிகள் தொழிற்பயிற்சி நிலையங்களில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில் சோ்ந்து பயிற்சி பெற்று அரசு, பொதுத் துறை, தனியாா் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் பெறலாம்.

மேலும், விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, காலணி, பாடப் புத்தகங்கள், மாதம் ரூ.500 உதவித் தொகை மற்றும் இலவச பேருந்து பயண அட்டை ஆகியவை வழங்கப்படும். தொழில்நிறுவனங்களில் பயிற்சி பெறும் போது உதவித் தொகை வழங்கப்படும். பயிற்சி முடித்தவா்களுக்கு தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

திருப்பூா் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் அளிக்கப்படும் தொழிற்பிரிவுகள் குறித்த விவரங்களை இணையதளம் வழியாக அறிந்து கொள்ளலாம்.

விருப்பமுள்ளவா்கள் திருப்பூா், தாராபுரம், உடுமலைப்பேட்டை அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள உதவிசேவை மையத்தை அணுகலாம் அல்லது ஆன்லைனில் மூலமாகவும் வரும் செப்டம்பா் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட திறன் பயிற்சிஅலுவலக மாவட்ட உதவி இயக்குநரை 0421-2250500 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.