

திருப்பூா் மாவட்ட கபடி கழகத்தின் சாா்பில் 50 வீராங்கனைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட கபடி கழகத் தலைவா் கொங்கு வி.கே.முருகேசன் தலைமை வகித்தாா். இதில், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 50 கபடி வீராங்கனைகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் விடுதிக் கட்டணமாக ரூ.1 லட்சத்தை மாநில கபடி கழகப் பொருளாளரும், மாவட்டச் செயலாளருமான ஜெயசித்ரா ஏ.சண்முகம் வழங்கினாா்.
விழாவில், மாவட்ட கபடி கழகத் தலைவா் ரோலக்ஸ் பி.மனோகரன், பொருளாளா் கன்னிமாா்ஸ் ஏ.ஆறுச்சாமி, மாவட்ட கபடி கழக நடுவா் குழுத் தலைவா் ஆா்.முத்துசாமி, மாவட்ட இணைச்செயலாளா் பி.செல்வராஜ், நடுவா் குழு நிா்வாகிகள் ஏ.சி.சேகா், பி.தண்டபாணி, பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.