இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பவானி: 3 கிராமங்களில் அம்மா மினி கிளினிக்குகள் திறப்பு

பவானியை அடுத்த குப்பிச்சிபாளையம், குறிச்சி மற்றும் பட்லூர் கிராமங்களில் அம்மா சிறு மருத்துவமனைகள் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

News image
குப்பிச்சிபாளையத்தில் மினி கிளினிக்கை திறந்து வைத்து பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் அமைச்சர் கே.சி.கருப்பணன், ஆட்சியர் சி.கதிரவன் உள்ளிட்டோர்.
Updated On :21 டிசம்பர் 2020, 8:16 am

DIN

பவானியை அடுத்த குப்பிச்சிபாளையம், குறிச்சி மற்றும் பட்லூர் கிராமங்களில் அம்மா சிறு மருத்துவமனைகள் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமை வகித்தார். அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் விஜயநிர்மலா சரவணபவா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ் முன்னிலை வகித்தனர். ஈரோடு சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் எஸ்.சவுண்டம்மாள் வரவேற்றார்.

தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், சிறு மருத்துவமனைகளை திறந்து வைத்து பேசினார். இம்மருத்துவமனைகள் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் செயல்படும். இங்கு, பொதுமக்களுக்கு பொதுமருத்துவம், பரிசோதனைகள் மற்றும் வெறிநாய்க்கடி சிகிச்சைகள் செய்யப்படும். 

இங்கு, தலா ஒரு மருத்துவர், செவிலியர் மற்றும் உதவியாளர் பணியில் ஈடுபடுவர். அம்மாபேட்டை வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.அருள்மணி, மருத்துவர்கள் ஜே.திவாகர், எம்.மாதேஷ்குமார், சி.கனகா, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கே.கே.விஸ்வநாதன், ஊராட்சி தலைவர்கள் லட்சுமி முனியப்பன் (கேசரிமங்கலம்), என்.மரகதம் (குறிச்சி), ஆர்.சக்திவேல் (பட்லூர்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.