மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருப்பூர் மாவட்டத்தில் 200 மேற்பட்ட கோயில்களின் முன்பாக இந்து முன்னணியினர் போராட்டம்

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களையும் வழிபாட்டுக்காகத் திறக்கக்கோரி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட கோயில்களின்

News image
Updated On :26 மே 2020, 6:49 am

DIN

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களையும் வழிபாட்டுக்காகத் திறக்கக்கோரி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட கோயில்களின் முன்பாக தோப்புக்கரணம் போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் பொதுமக்களின் வழிபாட்டுக்கு மார்ச் 24 ஆம் தேதி முதல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களையும் பொதுமக்களின் வழிபாட்டுக்காகத் திறக்க வேண்டும். இல்லாவிட்டால் அனைத்து கோயில்களின் முன்பாக இந்து முன்னணி சார்பில் செவ்வாய்க்கிழமை (மே 26)) தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடைபெறும் என்று மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பின்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேல்பட்ட கோயில்களின் முன்பாக இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில், திருப்பூர் ஈஸ்வரன் கோயில் முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அதே போல், இந்து முன்னணி வடக்கு நகர் மேற்கு பகுதி சார்பில் கொங்கணகிரி முருகன் கோயில் முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச்செயலாளர் மணிகண்டன், நகர செயலாளர் அரவிந்த், சுந்தர் சுரேந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.