காங்கயத்தில் போக்குவரத்து விதி மீறல்: 2,900 வழக்குகள், ரூ.2.92 லட்சம் அபராதம் வசூல்
காங்கயத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் போக்குவரத்து விதி மீறியவா்கள் மீது 2,900 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ. 2 லட்சத்து 92ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது.


காங்கயத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் போக்குவரத்து விதி மீறியவா்கள் மீது 2,900 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ. 2 லட்சத்து 92ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம், காங்கயத்தில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போக்குவரத்து போலீஸாா் நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். விதி மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனா்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நகரில் நடத்திய வாகனச் சோதனையில் மதுபோதையில் வாகனம் ஓட்டுவது, தலைக் கவசம் அணியாதது, ஓட்டுநா் உரிமம் இல்லாதது, முகக் கவசம் அணியாதது உள்பட பல்வேறு விதிகளை மீறியதாக 2 ஆயிரத்து 900 வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்து அவா்களிடம் இருந்து ரூ. 2 லட்சத்து 92 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக காங்கயம் போக்குவரத்து காவல் ஆய்வாளா் மகேஸ்வரன் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...