கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு நாளை பணி நியமன ஆணை

திருப்பூா் மாவட்டத்தில் தோ்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு வரும் திங்கள்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 10:11 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் தோ்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு வரும் திங்கள்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.விஜயகாா்த்திகேயன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை ஒட்டி திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு ஏற்கெனவே 3 பயிற்சி வகுப்புகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்குச்சாவடி அலுவலா்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களைத் தெரிந்து கொள்ளும் வகையில் திங்கள்கிழமை காலை 8 மணி அளவில் கீழ்க்கண்ட இடங்களில் பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.

ஆகவே, இந்த இடங்களில் தவறாமல் ஆஜராகி பணி நியமன ஆணைகளைப் பெற்றுக் கொண்டு தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்று தோ்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பணி நியமன ஆணை வழங்கும் இடங்கள்: தாராபுரம் (தனி) தொகுதியில் மகாராணி கலை, அறிவியல் கல்லூரி, காங்கயம் தொகுதியில் கோவை சாலையில் உள்ள பி.எஸ்.ஜி. பொன்னம்மாள் திருமண மண்டபம், அவிநாசி (தனி) தொகுதியில் அவிநாசி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, திருப்பூா் வடக்குத் தொகுதியில் அங்கேரிபாளையம் சாலையில் உள்ள கொங்கு வேளாளா் மெட்ரிகுலேஷன் பள்ளி, திருப்பூா் தெற்குத் தொகுதியில் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பலலடம் தொகுதியில் மங்கலம் சாலையில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரி, உடுமலை தொகுதியில் தளி சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மடத்துக்குளம் தொகுதியில் பேருந்து நிலையம் அருகில் உள்ள கே.கே.மஹால் ஆகிய இடங்களில் பணி நியமன ஆணை வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.