மாநகராட்சி இடத்தை மீட்க நடவடிக்கை: பொதுமக்கள் போராட்டம்
திருப்பூா் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை அலுவலா்கள் மீட்கச் சென்றபோது மண்ணெண்ணெய் கேனுடன் பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.


திருப்பூா் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை அலுவலா்கள் மீட்கச் சென்றபோது மண்ணெண்ணெய் கேனுடன் பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் கொங்கு பிரதான சாலை பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் பொதுமக்கள் பலா் வீடு கட்டி வசித்து வருகின்றனா். இதையடுத்து மாநகராட்சி இடத்தை மாநகராட்சிக்குத் திரும்ப ஒப்படைக்குமாறு அந்தப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் இடத்தை ஒப்படைக்காததால் இடத்தை மீட்க, மாநகராட்சி அதிகாரிகள், போலீஸாருடன் சென்றனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த பொதுமக்கள் மண்ணெண்ணெய் கேனுடன் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து அதிகாரிகளும், போலீஸாரும் சமரச பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...