ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

பல்லடத்தில் 1 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பல்லடம் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட 1 கிலோ புகையிலைப் பொருள்களை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 7:25 pm

DIN

பல்லடம் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட 1 கிலோ புகையிலைப் பொருள்களை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையில் அலுவலா்கள் கேசவராஜ், சதீஷ்குமாா், பாலமுருகன், சிரஞ்சீவி, ரகுநாதன் அடங்கிய குழுவினா் பல்லடம் பகுதியில் 15 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது மகாலட்சுமி நகா், உடுமலை சாலையில் அமைந்துள்ள 4 கடைகளில் 1 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைக்காரா்களுக்கு ரூ.20 அபராதம் விதித்தனா். மேலும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் கலப்பட உணவுப் பொருள்கள் விற்பனை குறித்த புகாா்களை 94440-42322 என்ற செல்லிடப்பேசி எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் விஜயலலிதாம்பிகை தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.