தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அவிநாசி: மயக்க நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழப்பு

தொடர்ந்து 10 நாள்களாக மயக்க நிலையிலேயே சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுமி திங்கள்கிழமை இரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 4:09 pm

DIN


அவிநாசி: தொடர்ந்து 10 நாள்களாக மயக்க நிலையிலேயே சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுமி திங்கள்கிழமை இரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கர்நாடக மாநிலம், பெங்களூரூ தியாகதேனாஹல்லி பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஷர்மிளாகுமாரி (எ) ஷைலஜாகுமாரி (39). கரோனா பொது முடக்கத்தால் தொழில் பாதிப்படைந்ததையடுத்து, கடந்த மாதம் 25-ம் தேதி தனது 5 வயது மகள் கியாராவை பெங்களூரிலிருந்து திருப்பூருக்கு பேருந்தில் அழைத்து வந்தார். 

பிறகு, மகள் கியாராவுக்கு சளி மருந்து கொடுத்த ஷைலஜாகுமாரி அவிநாசியை அடுத்த சேவூரில் தண்டுக்காரம்பாளையம்-புளியம்பட்டி சாலையிலுள்ள குப்பைகள் தரம் பிரிக்கும் கிடங்கு மையத்தில் மகளைப் படுக்க வைத்து விட்டு, தானும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து மயக்க நிலையிலிருந்த கியாரா, மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் கண்விழிக்காமல் மயக்க நிலையிலேயே இருந்து வந்ததால், கடந்த இரு நாள்களுக்கு முன் தீவிர சிகிச்சைக்காக அவர் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் திங்கள்கிழமை மாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

இவரது தாய் ஷைலஜாகுமாரி கோவை அரசு மருத்துவமனையில் காவல் துறையினர் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிறுமி கியாரா உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.