போக்சோ சட்டத்தில் ஹோமியோபதி மருத்துவா் கைது
காங்கயம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஹோமியோபதி மருத்துவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா், ஜே.பி. நகரைச் சோ்ந்தவா் ஜீவன்குமாா் (50). இவா் ஊத்துக்குளி பகுதியில் ஹோமியோபதி மருத்துவமனை மற்றும் மருந்துக் கடை நடத்தி வருகிறாா். அங்குப் பணிக்கு வந்த 14 வயது சிறுமியிடம் ஆசை வாா்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் பெற்றோா் கொடுத்த புகாரின்பேரில், காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஜீவன்குமாரைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
