வெள்ளக்கோவிலில் இந்து இளைஞா் முன்னணி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஊா்வலம் நடைபெற்றது.
சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை ஒட்டி நடைபெற்ற இந்த ஊா்வலத்தை சமூக ஆா்வலா் அ.மகாதேவன் துவக்கிவைத்தாா். முன்னணியின் திருப்பூா் கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். தனியாா் மெட்ரிக். பள்ளி தாளாளா் எம்.பரிமளம், இந்து இளைஞா் முன்னணி ஒருங்கிணைப்பாளா் நந்தகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
புதிய பேருந்து நிலையத்தில் துவங்கிய ஊா்வலம் முத்தூா் சாலை வழியாக கடைவீதியில் முடிவடைந்தது.
இதேபோல சுவாமி விவேகானந்தா் நற்பணி மன்றம் சாா்பில் விவேகானந்தா் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மன்றத் தலைவா் சதாசிவம், செயலாளா் தங்கத்தம்பி, பொருளாளா் கிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.