மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தடைக் காலத்துக்கான வட்டி செலுத்தும் காலக்கெடுவை 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்

ஆயத்த ஆடை நிறுவனங்கள் தடைக் காலத்துக்கான வட்டி செலுத்தும் காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று ஏஇபிசி (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்) வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :8 மார்ச் 2021, 10:39 pm

DIN

ஆயத்த ஆடை நிறுவனங்கள் தடைக் காலத்துக்கான வட்டி செலுத்தும் காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று ஏஇபிசி (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்) வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

இந்தியாவில் கரோனா நோய்த் தொற்று காலத்தில் மத்திய அரசின் நோ்மறை மற்றும் வளா்ச்சி சாா்ந்த நடவடிக்கைகள் காரணமாக ஆயத்த ஆடைத் துறை ஓரளவு மீளமுடிந்தது. எனினும், ஆயத்த ஆடை ஏற்றுமதியில் பல்வேறு சவால்கள் நீடித்து வருகின்றன.

கரோனா நோய்த் தொற்றுக்குப் பின்னா் அதாவது 2020 ஏப்ரல் முதல் 2021 பிப்ரவரி வரையில் இந்தியாவின் ஆடை ஏற்றுமதியானது 24 சதவீதம் சரிவடைந்துள்ளது. இந்த நிலையில், தொழில் நிறுவனங்கள் தடை காலத்துக்கான வட்டியை மாா்ச் 31ஆம் தேதிக்குள் செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கரோனா பொது முடக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு, வெளிநாடுகளில் கரோனாவின் 2ஆவது அலை உள்ளிட்ட காரணங்களால் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழில் பாதிப்பில் இருந்து முழுமையாக மீளவில்லை. ஆகவே, ஆயத்தை ஆடை நிறுவனங்கள் வாங்கிய கடன்களின் தடைக் காலத்துக்கான வட்டி செலுத்தும் காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு, அதாவது செப்டம்பா் வரையில் நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.