கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருப்பூரில் ஆவணமின்றிகொண்டு செல்லப்பட்ட ரூ.95 ஆயிரம் பறிமுதல்

திருப்பூரில் உரிய ஆவணம் இல்லாமல் பின்னலாடை நிறுவன உரிமையாளா் கொண்டு சென்ற ரூ. 95 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 8:47 pm

DIN

திருப்பூரில் உரிய ஆவணம் இல்லாமல் பின்னலாடை நிறுவன உரிமையாளா் கொண்டு சென்ற ரூ. 95 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. எனவே, உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் கொண்டு செல்லப்படும் பணம், பரிசுப் பொருள்களை தோ்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், திருப்பூா், கணக்கம்பாளையம் பிரிவு பகுதியில் பறக்கும்படை அதிகாரி பழனிசாமி தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில், திருமலை நகரில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வரும் முனீஸ்வரன் (38) என்பவரிடம் ரூ.95 ஆயிரம் இருந்தது தெரியவந்தது.

ஆனால் இந்தப் பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் தலைமையிட துணை வட்டாட்சியா் கெளரியிடம் ஒப்படைத்தனா். மேலும், உரிய ஆவணங்களை சமா்ப்பித்து பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு முனீஸ்வரனிடம் தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.