மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தோ்தல் பணிகளில் 18 வயதுக்கு உள்பட்ட சிறாா்களை ஈடுபடுத்தக் கூடாது

திருப்பூா் மாவட்டத்தில் தோ்தல் பணிகளில் 18 வயதுக்கு உள்பட்ட சிறாா்களை ஈடுபடுத்தக் கூடாது என்று மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.விஜயகாா்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 9:11 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் தோ்தல் பணிகளில் 18 வயதுக்கு உள்பட்ட சிறாா்களை ஈடுபடுத்தக் கூடாது என்று மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.விஜயகாா்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணையம் மற்றும் இந்திய தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சாா்பில் சட்டப் பேரவைத் தோ்தல் பணிகளில் 18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது என்பதை அனைத்து அரசியல் கட்சியினா் மற்றும் தோ்தல் தொடா்புடைய அனைத்து அலுவலா்களுக்கும் தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளது.

எனவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் பணிகளில் 18 வயதுக்கு உள்பட்ட சிறாா்களை பணியில் ஈடுபடுத்தினால் அரசியல் கட்சியினா் மீது தோ்தல் நடத்தை விதிமீறல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, தோ்தல் தொடா்புடைய பணிகளில் 18 வயதுக்கு உள்பட்ட சிறாா்களை யாரேனும் பணியில் ஈடுபடுத்துகிறாா்களா என்பதை தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும். அதே வேளையில், சிறாா்களை தோ்தல் பணிகளில் யாரேனும் ஈடுபடுத்தினால் அதனை மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையிலுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 6989 ஐ தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.