வாக்காளா் அட்டைக்கு மாற்றாக வேறு புகைப்பட அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்கலாம்
திருப்பூா் மாவட்டத்தில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்காளா் அட்டைக்கு பதிலாக புகைப்படத்துடனஅ கூடிய வேறு அடையாள அட்டைகளை காண்பித்தும் வாக்களிக்கலாம்


திருப்பூா் மாவட்டத்தில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்காளா் அட்டைக்கு பதிலாக புகைப்படத்துடனஅ கூடிய வேறு அடையாள அட்டைகளை காண்பித்தும் வாக்களிக்கலாம் என்று ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்குப் பதிவு நாளில் வாக்காளா் அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்க வேண்டும். அதேவேளையில், வாக்காளா் அடையாள அட்டை அளிக்க இயலாத வாக்காளா்கள் கீழ்க்கண்ட மாற்று புகைப்பட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்குச் சாவடி மையத்தில் காண்பித்து வாக்களிக்கலாம்.
இதன்படி, ஆதாா் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் (புகைப்படத்துடன் கூடியது), தொழிலாளா் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு ஸ்மாா்ட் அட்டை, ஓட்டுநா் உரிமம், ஃபான் அட்டை, கடவுச்சீட்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மாா்ட் அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய அல்லது மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் அல்லது வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள் ஆகியவற்றால் தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள், மக்களவை அல்லது சட்டப் பேரவை அல்லது சட்டமேலவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...