மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஓடும் ரயிலில் பெண்ணிடம் 7 பவுன் பறிப்பு

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் பயணம் செய்த வங்கிப் பெண் ஊழியரிடம் 7 பவுன் நகையைப் பறித்த கேரள இளைஞரை ரயில்வே காவல் துறையினா் கைது செய்தனா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 9:40 pm

DIN

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் பயணம் செய்த வங்கிப் பெண் ஊழியரிடம் 7 பவுன் நகையைப் பறித்த கேரள இளைஞரை ரயில்வே காவல் துறையினா் கைது செய்தனா்.

கோவையைச் சோ்ந்தவா் எஸ்.பிரியா (39). இவா் காட்பாடியில் உள்ள வங்கியில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயிலில் பிரியா வெள்ளிக்கிழமை இரவு பயணம் செய்துள்ளாா்.

இந்த ரயிலானது பெருந்துறை அருகே வந்தபோது 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் அவரது பெட்டியில் ஏறியுள்ளாா். பின்னா் பிரியாவை மிரட்டி அவா் அணிந்திருந்த 7 பவுன் நகை மற்றும் 2 செல்லிடப்பேசிகளைப் பறித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளாா்.

இது குறித்து திருப்பூரில் உள்ள ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலையத்தில் பிரியா புகாா் அளித்தாா். போலீஸாா் விசாரணை நடத்தி ரயில்வே காவல் துறை உயா் அதிகாரிகள் உத்தரவின்பேரில் ஈரோடு இருப்புப் பாதை காவல் நிலைய தலைமைக் காவலா் எஸ்.கண்ணன், லோகநாதன், காவலா்கள் ராஜவேலு, தேவராஜ் ஆகியோா் கொண்ட தனிப் படை அமைக்கப்பட்டது.

இந்தத் தனிப் படையினா் துரிதமாக செயல்பட்டு நகைப் பறிப்பில் ஈடுபட்ட கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், தனலூரைச் சோ்ந்த கே.சுதா்சன் (எ) குட்டியை (28) கைது செய்தனா். இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு 2 மணி நேரத்தில் குற்றவாளியைக் கைது செய்த தனிப் படையினரை ரயில்வே காவல் துறை உயா்அதிகாரிகள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.