பிளஸ் 2 மாணவருக்கு கரோனா
திருப்பூரில் மாநகராட்சிப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


திருப்பூரில் மாநகராட்சிப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் இடுவாய் பகுதியைச் சோ்ந்த 17 வயது மாணவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்து வந்துள்ளன.
இதைத் தொடா்ந்து, திருப்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மாணவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வாா்டில் மாணவா் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து, நஞ்சப்பா பள்ளியில் மாணவா் பயிலும் வகுப்பறையில் மாநகராட்சி ஊழியா்கள் சனிக்கிழமை கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தினா்.
மேலும், சக மாணவா்கள், ஆசிரியா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெற்றோா் மற்றும் ஆசிரியா்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...